


தமிழில் கூறப்பட்டுள்ளதாலும், தென்னாட்டார் வட நாட்டாரை வென்றது என்பதாலுமே இது வரலாற்றில் இடம் பெறவில்லை என்பதை உணர்ந்தும், இனியும் திராவிட இனம் தனியிடம் கேட்பதற்குத் தயங்குமா? திருமாவளவனும் கரிகால்வளவனும், ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியனும், பெருஞ்சோற்றுதியன் சேரலாதனும், பிறரும் வாகையுடன் வாழ்ந்ததை நாம் அறிவோம். ஆதாரமுண்டு. சேரலாதன் அளித்த பெருஞ்சோறு, வட நாட்டில் வாடிய ஆரியர்க்குத் தமிழக வளனைச் சுவைக்க வாய்க்கு வாய்ப்புக் கிடைத்ததால் வாழ்வுக்கு வாய்ப்புக் கிடைத்ததென்று தென்னாடு நுழையத் தூண்டியதோ என்ற ஐயமும் உண்டு. வள்ளற்றன்மை தமிழரின் வாழ்வைப் பாழாக்கவா பயன்பட வேண்டும்? என்ற வருத்தமும் உண்டு.
இராசராச சோழனின் வெற்றியும், இராசேந்திரனின் பர்மா படையெடுப்பும் கங்கை கொண்ட சோழனின் வரலாறும் மறந்தோமில்லை. இவையெல்லாம் போரிலே கண்ட வெற்றிகள்! பற்பல வேல்கள் பாய்ந்ததால் விளைந்த வாகைகள்! ஆனால், அன்றிலிருந்து இன்றுவரை ஆரியத் தொடர்பால் தமிழரின் வெற்றி இடம் பெறாத அளவுக்கோ இடம் பெற முடியாத அளவுக்கோ அல்ல, இடம் பெறத் தகுதியற்ற அளவிற்குத் தமிழர் அறிவிழந்துள்ளனர். ஆரியர் அனைவரும் கற்றவர், தமிழர் யாவரும் கல்லாதவர் (100க்கு 95) என்ற நிலை. பேதமற்ற மனமும், காதல் கனிவும், வீரமும் – ஈரமும் நிறைந்த போதே அறிவினை ஆண்டவன் பேரால் அடகு வைத்து விதியின் விளையாட்டிலே ஈடுபட்டனர்.
போர் முனையிலே வாளுடன் வாள் பேச, ஈட்டிக் குத்தைக் கேடயந் தடுக்க, தைத்திட்ட வேலினைப் பறித்து எதிரியின் உயிரினைப் போக்கி நகைத்து அஞ்சா வன்மையுடன் வெற்றி கொண்ட தமிழர், பஞ்சாங்கப்படை முன் மண்டியிட்டு, வேதியக்கூட்டம் ஓதியவற்றை நம்பி தர்ப்பைப் புல்லிற்குத் தலை வணங்கி நின்றனர்.
இனிக் கலையென்னும் பெயரால், ஆரியம் வீசிய வலையில் வீழ்ந்திடும் தமிழர் நிலையும், ஓவியத்தின் அழகுச் சிலையின் நேர்த்தி, காவியத்தின் அமைப்பு. இலக்கியத்தின் போக்கு, சொல்லினிமை, பொருள் நயம் என்று பற்பல கூறி மயக்கிடும் மனக்குலைவும், வருத்தத்தையும் விளைவிப்பன. கம்பராமாயணமும், பெரிய புராணமும் இலக்கியப் பெயரால் மதக்கருத்தை மக்களுக்கு ஊட்ட முற்பட்டு, ஆரிய அடிமை ஏடுகளாய் தமிழர் தலைமீது தாங்கும் நிலை பெற்று, தமிழர் விலை கொடுத்து வாங்கும் உணர்வைக் கொலை புரியும் நஞ்சாய் அமைந்துள்ளன. மதமெனும் முள்ளில், கலையெனும் ஊன் அமைக்கப்பட்டிருப்பதறியாது உணவெனக் கருதிச் சுவைத்திடச் சென்று, அவ்வழி ஆரியத் தூண்டிலிற் சிக்கி வாழ்வினைப் பறிகொடுக்கின்றனர் தமிழர். பழந்தமிழ்ப் பனுவலாம் புறநானூற்றில், ஆரியமும் நுழைந்துள்ளது என்பது எவரும் மறுக்க முடியாது.

திராவிட நாட்டின் தமிழ்ப் பகுதியில் காஞ்சிபுரத்தைத் தலைநகராகக் கொண்டு கி.பி (300 முதல் 700) 7-ஆம் நூற்றாண்டு வரை ஆண்ட பல்லவர்களைப் பற்றிப் பலரும் படித்திருக்க முடியும். வடமொழியும் நாலு வேதமும் இந் நாட்டில் ஒழுங்காக வளர்க்கப்படுவதற்குத் துணை புரிந்தார்கள் என்பதன்றி வடநாட்டிலிருந்து கூட்டங் கூட்டமாகப் பார்ப்பனர்களை அழைப்பித்துத் தமிழகத்தில் பல இடங்களில் குடியேற்றி, பிரமகானம், தேவகானம் முதலிய பெயரால் பல கிராமங்களை முற்றூற்றுகளாக (வரியின்றி) வழங்கினராதலின், தமிழகத்தின் பல பகுதியும் இன்று சதுர்வேதி மங்கலங்களாகக் காட்சியளிக்கின்றன.

“His regin was responsible for a greatwave of a immigration particularly of Brahmana settlers in Andhra desa from the north and north west. The immigrants came in all probability, at the invitation of the Emperer Santamula who after a lapse of more than a century revived the Vedic sacrifices and particularly the celebrated Vajabeya and Aswamedhe… Thus new villages were founded and Brahmana settlements established.”
மகாசாந்த மூலரின் மகன் வீரபுருடதத்தன் என்பவன், (கி.பி. 218-239) தன் காலத்தில் ஆரிய நுழைவால் தன் நாட்டிற்கு வந்த கேட்டினை உணர்ந்து அதனை நீக்க முற்பட்டான். அவன் புத்தமத்தைத் தழுவியதன்றித் தன் நகரில் அமைத்த புத்த விகாரங்களின் பார்வைச் சுவரில் பார்ப்பனீயத்தை வெறுப்பதைக் காட்ட ஓர் லிங்க உருவத்தை உதைத்துத் தாழ்த்துவது போல் லிங்கத்தின் உச்சியில் தம் குதிகாலை வைத்துக் கொண்டுள்ள நிலையில் பல கற்பதுமைகள் செதுக்கிப் பதிய வைத்திருந்தவை இன்றும் காணப்படுகின்றன. அவற்றில் பெரிய இரண்டு சிலை உருவங்கள் மேற்கண்ட நூலில் படமெடுத்தும் காட்டப்பட்டிருக்கின்றன.
“The Ikshavahu king who was till then a follower of vedic Brahmanism and a worshipper of Siva in the form of linga renounced faith and became a true convert to Buddhism. (P.58)
In this panel there is a representation of monarch crushing with his right heel, a stone linga, which is encircled by many headed serpant. The linga and the serpent apparently symbolise Brahmanism and worship of Maheswara. The Brahamanism is denounced by the king in the presence of his ministers and hig diginitaries of State…
It is probable that “Sri Virapurushadatha” attempted to crush the tide of Brahmanism which received great impetus and revival under the aegis of his llustrious father Santhamula the great, only, two decades ago” (pages 59-60)
ஆந்திராவானாலும் அங்கும், ஆரியப் படையெடுப்பு கி.பி. 200-ல்தான் வெற்றி பெற்றதென்பதும் அஞ்ஞான்றும் அவர்களுக்கு எதிர்ப்பு இருந்ததென்பதும் தெரியவருகின்றது. திராவிட நாட்டுப் பிரிவினைக்கு ஆந்திர வரலாறு ஆதாரம் பல தருகின்றது. ஆந்திரத் தோழர்கள் இதனை உணரும் நிலை விரைவில் ஏற்பட வேண்டும்.
(தொடரும்
No comments:
Post a Comment